கடலூர் மாவட்டம் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.

இது பண்டைய, வரலாற்று மாவட்டங்களில் ஒன்றாகும்.

1993, செப்டம்பர், 30 – அன்று, தற்போதுள்ள கடலூர் மாவட்டம் தென் ஆற்காடு மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.

கடலூர் நகரம் , மாவட்டத்தின் தலைநகரமாக இருக்கிற்து. இந்த மாவட்டத்திற்கு இன்நகரத்தின் பெயரினையே பெயரிடப்பட்டுள்ளது.

புராணத்தில் இந்த மாவட்டம் ஸ்ரீராமபகுதியாக விவரிக்க குறிப்பிடபட்டுள்ளது.

1801 ஆம் ஆண்டில், கேப்டன் கிரஹாம், பாலார் மற்றும் போர்டோநோவோ ஆறுகளுக்கு இடையில் உள்ள மாவட்டத்தின் பொறுப்பாளராகவும், தென் ஆற்காடு மாவட்டத்தின் முதல் கலெக்டராகவும் பொறுப்பேற்றர்.

இப்போது கடலூர் மாவட்டத்தில் மூன்று பிரிவுகளும், பத்து தாலுகள், முப்பது இரண்டு ஊராட்சிகளும், 905 வருவாய் கிராமங்கள் வருவாய் நிர்வாகத்தில் உள்ளன.

இந்த மாவட்டத்தில் 13 பஞ்சாயத்து சங்கங்கள் மற்றும் 683 கிராம பஞ்சாயத்துகள் கிராமப்புற மேம்பாட்டு நிர்வாகத்தில் உள்ளன.

நகர்ப்புறத்தில் ஐந்து நகராட்சிகள் மற்றும் 18 நகர பஞ்சாயத்துகள் உள்ளன. இந்த மாவட்டத்தில் ஒன்பது சட்டமன்ற மற்றும் இரண்டு பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.

மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பு பரப்பளவு 3678 சதுர கிலோ மீட்டர்.

இந்த மாவட்டத்தில் ஐந்து பெரிய ஆறுகள் இயங்குகின்றன. மின்சாரம் உற்பத்திக்கு உதவுவதற்காக லிங்கைட் சில சிறிய சுரங்கங்கள் மாவட்டத்தில் கொண்டுள்ளது.

இந்த மாவட்ட மக்களுக்கு வேளாண்மை மற்றும் தொழிற்துறைகளும் முக்கிய தொழிலாகும். மிகுந்த சுவையன பலாப்பழங்களும் மற்றும் உயறியதரம் வாய்ந்த முந்திரி பருப்புககளும் இந்த மாவட்டத்தில் விளைவிக்கப்படுகின்றன அவைகள் மிகவும் பிரபலமாக உள்ளன.

உலகின் பிரபலமான சர்க்கரை மற்றும் சாக்லேட் மிட்டாய்கள் இந்த மாவட்டத்தில் தயாரிக்கப்படுகின்றன.

ஏப்ரல் மாதம் கோடைகாலம் தொடங்கி ஜூன் வரை நீடிக்கும். இந்த மாதங்களில் வெப்பநிலை 23 ° C முதல் 40 ° C வரையும். ஜூலை முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் கடலூரில் மழைக்காலம் நிலவுகிறது.

இந்த பருவத்தில் கன மழை இம்மாவட்டத்தில் பரவலாக கனமழை பொழியும். நவம்பர் மாதம் கடலூரில் குளிர்காலம் துவங்கும். அப்பொழுது 12 ° C முதல் 30 ° C வரை வெப்பநிலை நிலவுகிறது.

கடலூர் மாவட்டம் இயற்கை இடர்படுகள் அதிகம் விளையும் மாவட்டமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் நீண்ட கடற்கரை உள்ளது, எனவே மாவட்டத்தில் ஆறுகள் ஏரிகள் அதிகம் உள்ளதால் அதிகம் வெள்ளம் ஏற்படுகின்றது.

1929 – ஆம் ஆண்டு,கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்தில், அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. மற்றும் நூலகம் உருவாக்கப்பட்டது.

2008 – ஆம் ஆண்டு நி சூறாவளி இம்மாவட்டத்தைத் தாக்கியது.

2011, டிசம்பரில், தானே புயல் இம்மாவட்டத்தைத் தாக்கியது.

இது போன்ற சூறாவளிகலால் கடுமையான சேதம் இம்மாவட்டத்திற்கு உண்டானது.

2004, டிசம்பர், 26 – அன்று, ஏற்பட்ட சுனாமியால் மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கடலூரும் ஒன்று ஆகும்.

இந்த சுனாமி காரணமாக ஏற்பட்ட பேரழிவில், பில்லியன் கணக்கான டாலர்கள் உள்கட்டமைப்பு, பொருளாதார சொத்துக்கள் மற்றும் பொருட்கள் ஆகியவற்றைக் காட்டிலும் அதிகமானதாகும். இதில் பேரழிவான விலைமதிப்பற்ற மனித இழப்பு விகிதம் அதிகமாக இருந்தது.

2021, அக்டோபர், 22 – அன்று கடலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.



அணைகள்


ஆறுகள்