அ) நிலைமொழியிறுதிக் குற்றியலுகரம், உயிர் முதன்மொழியோடு புணரும்போது தான்ஊர்ந்து வந்த வல்லின மெய்யை நிறுத்தித் தான்மட்டும் மறையும். பின் அவ்வல்லின மெய்யுடன் வருமொழி முதலிலுள்ள உயிர் உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி சேர்ந்து புணரும்.

எ.கா : கருத்தோடு+இசைத்த

1. உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்            கருத்தோ(ட்+உ)+இசைத்த

2. உடல்மேல் உயிர்வந்து ஒன்றியது                 

கருத்தோ(ட்+இ)சைத்த கருத்தோடிசைத்த

ஆ) நிலைமொழி இறுதிக் குற்றியலுகரம் யகர முதன்மொழியோடு புணரும்போது இகரமாகத் திரிந்து புணரும்.

எ.கா : களிறு+யானை

1. நெடிலோடு உயிர்த்தொடர் என்னும்               

  விதிப்படி றகர ஒற்று இரட்டியது

களி(ற்)று+யானை 

2. உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்           

களிற்     (ற்+உ)+யானை

3. யவ்வரின் இய்யாம்                               

களிற்(ற்+இ)+யானை

களிற்றியானை

விதி :

“உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்

யவ்வரின் இய்யாம் முற்றுமற் றொரோ வழி        நன்னூல் -164

இ) நிலைமொழி ஈற்றில் டகரத்தையும்(ட்), றகரத்தையும்(ற்) பற்றுக்கோடாகக் கொண்டுவரும் நெடிற்றொடர்க் குற்றுகரமும், உயிர்த்தொடர்க் குற்றுகரமும் வருமொழியோடு புணரும்போது தாம்ஊர்ந்து வரும் ஒற்றுகள் இரட்டித்துப் புணரும்.


நெடிற்றொடர் :

1. எ.கா : கோடு+அன்ன

டகர ஈறு                                 கோடு(ட்+உ)+அன்ன

ஒற்று இரட்டித்தது                        கோ(ட்)டு+அன்ன

உக்குறள் மெய்விட்டோடியது             கோட்(ட்+உ)+அன்ன

உடல்மேல் உயிர் வந்து ஒன்றியது       கோட்(ட்+அ)ன்ன

                                          கோட்டன்ன

2. எ.கா : ஆறு+கரை

றகர ஈறு                                 ஆறு(ற்+உ)+கரை

ஒற்று இரட்டித்தது                        ஆ(ற்)று+கரை

வல்லெழுத்து மிக்கது                     ஆற்றுக்கரை


உயிர்த்தொடர் :

3. எ.கா : முரடு+காளை

டகர ஈறு                                 முரடு(ட்+உ)+காளை

டகரம் இரட்டித்தது                        முர(ட்)டு+காளை

வலிமிக்கது                               முரட்டுக்காளை

4. எ.கா : களிறு+மருப்பு

றகர ஈறு                                 களிறு(ற்+உ)+மருப்பு

றகரம் இரட்டித்தது                        களி(ற்)று+மருப்பு

                                          களிற்றுமருப்பு

விதி :

“நெடிலோ டுயிர்த் தொடர்க் குற்றுக ரங்களுள்

டறவொற றிரட்டும் வேற்றுமை மிகவே ”                    நன்னூல் -183