சமையலில்_செய்யக்கூடாதவிடயங்கள்..!!

ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

காய்கறிகளை நறுக்குவதற்கு முன், தண்ணீரில் நன்கு கழுவிய பிறகு நறுக்கவும். நறுக்குவதற்கு முன் ஊற வைப்பதோ, காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவுவதோ கூடாது.

காய்கறிகளிலும் பழங்களிலும் தோலை ஒட்டித்தான் தாதுஉப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் நிறைந்திருக்கினறன. எனவே, முடிந்தவரை தோலுடன் சமைக்க வேண்டும்.

கீரை வாங்கும்போது மஞ்சள் நிறமுள்ள இலைகள் அதிகமிருந்தால் வாங்குவதைத் தவிர்க்கவும். ஓட்டைகள் மற்றும் பூச்சிகளின் முட்டைகள் உள்ள கீரைகளையும் வாங்கக்கூடாது.

பழங்கள், காய்கறிகள், சிறுதானியங்களில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கும். எனவே, இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

பாலைத் திரித்து பனீராக்குவதற்கு எலுமிச்சைச் சாறு ஊற்றுவோம்.

அதற்கு பதில் தயிர் ஊற்றி, பாலைத் திரித்தால் பனீர் புளிக்காமல் சுவையாக ‌இருக்கும்.

பூரிக்கு மாவு பிசையும்போது கால் டீஸ்பூன் ரவையைச் சேர்த்துக் கொண்டால், பூரி புஸுபுஸுவென உப்பலாக இருக்கும்.

எலுமிச்சை சாதம் செய்யும்போது தாளித்ததும் சாற்றை ஊற்றிக் கொதிக்கவிட்டால் சாதம் கசந்து போகும். அதற்கு பதில் ஒரு கிண்ணத்தில் எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்துகொள்ளவும். அதில் தாளித்ததை ஊற்றிக் கலக்கிய பிறகு, சாதத்தில் சேர்த்துக் கிளறினால், சாதம் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

செய்யக்கூடியவிடயங்கள்..!!

கீரையை வேகவிடும்போது சிறிதளவு வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் பச்சை நிறம் மாறாது; ருசியாகவும் இருக்கும்.

தயிர் வடை போன்றே தயிர் இட்லியும் செய்யலாம்! தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை அரைத்து தேவையான தயிரும், உப்பும் சேர்த்து வைக்கவும். இட்லிகளை சதுரமான துண்டுகளாக்கி, இந்தக் கலவையில் சில நிமிடங்கள் ஊறவைத்துப் பரிமாறினால்… மணம், சுவை நிறைந்ததாக இருக்கும். விருப்பப்பட்டால், கேரட் துருவல், காராபூந்தி இவற்றையும் மேலே தூவலாம்.

வாழைப்பூவை சமையலுக்கு பயன்படுத்தும்போது மோர் கலந்த தண்ணீரில் பொடியாக நறுக்கிப் போட்டு, பின் அதை ஜல்லி கரண்டியால் அரித்தெடுத்து இட்லி பானையில், இட்லி வேகவைப்பது போல் வேகவைத்தெடுத்தால், பூ கறுக்காமல் இருக்கும்.

தக்காளி சூப் நீர்த்துப் போய்விட்டால் மாவு கரைத்து விடுவதற்கு பதில், வெந்த உருளைக்கிழங்கு ஒன்றை மசித்து சேர்த்தால் ருசியும் கூடும்; சத்தும் அதிகம் கிடைக்கும்.

தொண்டை கட்டிக்கொண்டால்… கற்பூரவல்லி சாற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்து பருகினால் சரியாகிவிடும்.

அதிக அளவு பாலாடை தேவைப்படுகிறவர்கள் கொதித்து ஆறிய பாலை மூடாமல் ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே அதிக அளவு பாலாடை தோன்றிவிடும்.

கறிவேப்பிலை, கொத்தமல்லியை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது மஸ்லின் துணியில் சுற்றி வைத்தால், நிறம் மாறாமல் பச்சைப்பசேலென இருக்கும்.

துவரம்பருப்புடன் இரண்டு மஞ்சள்பூசணித் துண்டுகள் (அ) சர்க்கரை வள்ளிக் கிழங்கு துண்டுகளை சேர்த்து வேகவைத்து, மசித்து, சாம்பாரில் சேர்த்தால்… சாம்பாரும் ருசிக்கும்; துவரம்பருப்பின் அளவையும் குறைத்துக்கொள்ளலாம்.

கேரட் அல்வா கிளறும்போது பால் ஊற்றுவதற்குப் பதிலாக பால்கோவா போட்டுக் கிளறி, ஏதாவது ஒரு எசென்ஸ் சில துளிகள் சேருங்கள்… பிரமாதமான சுவையில் இருக்கும்.

வடை தட்டும்போது உள்ளே ஒரு பனீர் துண்டை வைத்து மாவால் மூடி எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்தால், வடை வித்தியாசமான ருசியுடன் இருக்கும்.

பாகற்காய் குழம்பு செய்யும்போது, நாலைந்து துண்டு மாங்காய் சேர்த்து வைத்துப் பாருங்கள்… பாகற்காயின் கசப்பு தெரியாது; ருசியும் கூடும்.

சிறிதளவு இஞ்சியோடு மிளகு, தேங்காய்த் துருவல், பேரீச்சம்பழம், உப்பு சேர்த்து அரைத்து, தயிரில் கலந்தால், சூப்பர் சுவையில் பச்சடி தயார்.

குலாப் ஜாமூன் ஜீரா மிகுந்துவிட்டால், அதில் மைதாவை சிறிது சிறிதாக சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி போல் திரட்டி, சதுர துண்டுகளாக வெட்டி. எண்ணெயில் பொரித்தால்… சுவையான பிஸ்கட் ரெடி! இதை மிக்ஸரிலும் சேர்க்கலாம்.

ஜவ்வரிசி, ரவை இரண்டையும் சம அளவு எடுத்து வறுத்து, பால் சேர்த்து வேகவிட்டு, வெல்லப்பாகு சேர்த்து, நெய்விட்டுக் கிளறினால், வித்தியாசமான சுவையுடன் சர்க்கரைப் பொங்கல் ரெடி!

வற்றல் குழம்பு செய்யும்போது, கடைசியில் வெங்காய வடகத்தை வறுத்துப் பொடித்துப் போட்டு கிண்டிவிட்டால், குழம்பு கனஜோரா இருக்கும்!

முருங்கை இலைக் காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதை இடிக்கவும். இஞ்சி, மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை இடித்து அதனுடன் சேர்க்கவும். இதில் தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, பாதியாக்கி வடிகட்டி, சூப் போல குடித்து வந்தால்… உடல் வலி குணமாகும்.

மல்லியை (தனியா) சிறிதளவு நெய் விட்டு வறுத்துப் பொடி செய்து… சாம்பார் செய்து முடித்தவுடன் இந்தப் பொடியை போட்டு மூடிவைத்தால், சாம்பார் நல்ல மணத்துடன் இருக்கும்.

எந்தவிதமான சூப் செய்தாலும், சோள மாவு இல்லாவிட்டால், ஒரு டீஸ்பூன் அவலை வறுத்து, பொடித்து, சலித்து, அதில் சேர்த்துக் கொதிக்கவிட்டால்… சூப் கெட்டியாக, ருசியாக இருக்கும்.

பீட்ரூட்டையும், ரோஜா இதழையும் அரைத்து அடிக்கடி உதடுகளில் தடவிவந்தால்… நாளடைவில் உதடுகள் நல்ல நிறமாகும்.

ஈ, கொசு வராமல் தடுக்க சில வழிகள்… புதினா இலையை கசக்கி அறையின் ஒரு மூலையில் வைக்கலாம்; காய்ந்த கறிவேப்பிலையைக் கொளுத்தலாம்; ஒரு ஸ்பூன் காபி பொடியை வாணலியில் போட்டு சூடுபடுத்தலாம்.

குப்பைமேனி இலையோடு மஞ்சள், கல் உப்பு சேர்த்து அரைத்து தோலில் அரிப்பு, அலர்ஜி, சிரங்கு உள்ள இடங்களில் தடவி வந்தால்… விரைவில் குணமாகும்.

கற்பூரம், பச்சை கற்பூரம், நாப்தலின் உருண்டை, மிளகு, உப்பு இவற்றை பொடித்து சிறு துணியில் கட்டி அலமாரி, பீரோவில் வைத்துவிட்டால், பூச்சி வராது; நறுமணமாக இருக்கும்.

சப்பாத்தி தேய்க்கும்போது, தொட்டுக்கொள்ள கார்ன்ஃப்ளார் (சோள மாவு) பயன்படுத்தினால் நன்றாக வரும்; மாவும் கொஞ்ச மாகத்தான் செலவழியும்.

இட்லிமாவு அரைத்தபின் ஒரு வெற்றிலையைக் கிள்ளிப்போட்டு வைத்தால், மாவு பொங்கி வழியாது.


சிறுகதைகள்

தன்னிடம் உள்ளதைத்தானே பிறருக்கு தருவான் | சிறுகதை

நீயும் (கொஞ்சமாவது) முயற்சி செய் | சிறுகதை

மூன்று கேள்விகள் | சிறுகதை

போக்குவரத்து விதிகளை மீறினால்? சிறுகதை

சுட்ட நாக்கு | சிறுகதை

எந்த வியாதியாக இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும் | சிறுகதை

பொறுமை தான் உறவுகள் நீடிக்கக் காரணம் | சிறுகதை

தொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது

மை… மை… மை…. | சிறுகதை


சிந்தனைகள்

எது சின்ன பாவம்? எது பெரிய பாவம்? | சிந்தனைகள்

இது தான் வாழ்க்கை

அனைவரும் பின்பற்ற வேண்டிய நாகரிகங்கள்

சிந்தித்து செயல்பட்டால் வெற்றி உறுதி

இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது

மனிதனின் வெற்றிகள் | சிந்தனைகள்

அற்புத உரைகல் | சிந்தனைகள்

நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே | சிந்தனைகள்

எதுக்குங்க நம்ம முன்னோர்கள் போராடி சுதந்திரம் வாங்கினாங்க


நகைச்சுவை

கல்யாணம் பண்ணவனுக்கு ஏதுடா நிம்மதி? | நகைச்சுவை

பேருந்தில் இருவருக்கு இடையே சண்டை | நகைச்சுவை


தமிழர்கள்களின் நுண்ணறிவு

கிணத்து தண்ணி யாருக்கு?

எலிப்பொரியும் எஜமானியும் – நீதி கதை

மன்னரின் பணிவு கண்டு வியந்த அமைச்சர்

உலகின் மிக வயதான சீன பாட்டி

நாம் உயபயோகிக்கும் பணம் எங்கெல்லாம் செல்கிறது?

நேர்மைக்கு கிடைத்த மரியாதை

புத்திசாலி அரசனின் சாமர்த்தியம்

ஆர்க்கிமிடீஸ் தீர்த்த புதிர்

கூண்டில் வளர்க்கப்பட்ட எலி

சமையலில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத செயல்கள்

குளிர்பதனப்பெட்டி (ஃபிரிட்ஜ்) பராமரிப்பு பற்றிய சில தகவல்கள்

நமது வாழ்க்கை முறையில் மாற்றம் தேவை

அச்சம் ஒருவனை முட்டாளாக்கிவிடும்

வாழ்க்கையில் துன்பம் துயரம் வந்தால்?

ஆரத்தி எடுப்பது ஏன்?

விதியா? மதியா?

திறுநீறும் ருத்ராஷமும்

கு(ட்)டி முதலை

நாம் நாமாகவே இருப்போம்

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயிலுக்குப் போய் இருக்கிறீர்களா?

பட்டுக்கயிறு

வாழ்க்கைப்படும் பாடு

முயல் ஆமை

எது உண்மையான அமைதி

முதலையும் சிறுவனும்

ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார்

புதுசா எதாவது வாங்கும்போது உள்ள இருக்கற சிலிக்கா ஜெல் பாக்கெட்டை தூக்கி போடாதீங்க

எனக்கு மெயில் ஐடி இல்லை..

பணம் என்பது வெறும் காகிதம் மட்டுமே

கடவுள் பக்தி

கிருஷ்ண பக்தி கதை

மனிதனின் மதிப்பு

இந்தக் கடல் மாபெரும் திருடன்

பிஸினெஸ் தந்திரங்கள்

எங்கே? எங்கே?

யாரங்கே?

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன ?

தர்மராஜா தலைகுனிந்தார்

தீங்கு இல்லாத விவசாயத்தை மேற்கொள்வோம்

உலகில் இலவசம் என்று எதுவும் இல்லை

நமது முன்னேற்றத்தை தடுக்கும் ஏழு தடைகள்

ஒரு குழந்தை எழுதிய கட்டுரை

நம் மகன்

நிஜமான தர்மவான்!

இது ஒரு சுலபமான புதிர் – முயற்சியுங்கள்

குலதெய்வம்

எண்ணங்கள் அழகானால், எல்லாம் அழகாகும்

வார்த்தையின் சக்தி

புத்திசாலி இளைஞன்

புத்திசாலி சிறைக்கைதி

புதிர் கதை

தமிழனின் தொழில்நுட்பம்

விளம்பரத்தின் வலிமை

நண்பனா? எதிரியா?

இந்த நிலை மாறும்

பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….?

ஏன் ரயிலில் மட்டும் நீங்கள் விரும்பிய இருக்கையை தேர்வு செய்ய முடியாது என தெரியுமா?

தொலைக்காட்சியின் கதை

முயற்சி செய்

வாழ்க்கையின் பயனுள்ள குறிப்புகள்

தவளை

புறா

சண்டை

மகிழ்ச்சி உங்களை தேடி வர

பொக்கை வாய்

முன்னேறு

நானூம் அந்த சமயத்தில் கண்னை மூடிக்கொன்டிருந்தேன்

உளவியல் ரகசியங்கள்

‍கொக்கு

ஆனைக்கு ஒரு காலம் வந்தால்…

பல இந்துக்கள் கூட அறியாத இந்துக் கடவுள்களின் அற்புதங்கள்

கிரைய பத்திரம் பதியும் போது கவணிக்க வேண்டிய 16 விசயங்கள்

மறந்துவிட்டேன்

கெடாமல் பாதுகாக்க வேண்டியது

நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல்…

தமிழர்கள்

உண்மையான அன்பை பிறருக்குக் கொடு

நடப்பதெல்லாம் நன்மைக்கே

சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்

உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை

பிச்சை ஓடு

வாழ்க்கையில் எல்லாரும் ஒன்று தான்

ஆனைக்கு (ஆ+நெய்) ஒரு காலம் வந்தால்… பூனைக்கு (பூ+நெய்) ஒரு காலம் வரும்…இது ஒரு பழமொழி

நாம் மறந்த விளையாட்டுகள்

பெண்களைப் பற்றி மற்ற நாட்டினரின் பொன் மொழிகள்

காமராஜரின் நட்பு

2020 ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு