1812 ஆம் ஆண்டு, மலையத்துவசன் மகன் ஞானபிரகாசம் அவர்கள் முதன் முதலில் திருக்குறளை பதிப்பித்து, தஞ்சையில் வெளியிட்டார்.
1820 – ஆம் ஆண்டு, தஞ்சாவூரில் சரசுவதி மஹால் நூலகம் உருவாக்கப்பட்டது.
1855, பிப்ரவரி, 19 – அன்று, உ. வே. சாமிநாதையர் அவர்கள் தமிழ் நாட்டில் தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் உள்ள “உத்தமதானபுரம்” எனும் சிற்றூரில் வேங்கட சுப்பையர் மற்றும் சரசுவதி அம்மாள் தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்தார்.
1981 – ஆம் ஆண்டு, தஞ்சை தமிழ்பல்கலைக்கழக நூலகம் உருவாக்கப்பட்டது.
2014 – ஆண்டு, தஞ்சாவூர் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.
2021, அக்டோபர், 22 – அன்று, கும்பகோணம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.
எட்டாம் உலகத்தமிழ் மாநாடு – 1995 தஞ்சை
தஞ்சாவூரிலுள்ள வடுவூரில் பறவைகளுக்கான சரணாலையம் உள்ளது.
இங்குள்ள சரஸ்வதி மகாலில் பழங்கால ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படுகிறது.
கல்லணையானது, தஞ்சாவூர் மாவட்டத்தில், பூதலூர் வட்டத்தில் உள்ள தோகூர் – கோவிலடி கிராமத்தில் அமைந்துள்ளது.