பஞ்ச பாண்டவர்களில் முதல்வரான தர்மர் தான் உலகிலேயே மிக அதிக தர்மம் செய்தவர் என்பார்கள்.
தன்னைத் தவிர இவ்வுலகில் அதிக தானம் செய்பவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது என்பது தர்மரின் எண்ணம்.
இதுவே, அவருக்கு அகந்தையாக மாறிவிடக்கூடாது என்ற எண்ணம் கண்ணபிரானுக்கு ஏற்பட்டது.
எனவே அவர் தர்மருடன் மலைநாட்டுக்கு சென்றார்.
அந்த நாட்டை மகாபலி சக்கரவர்த்தி ஆண்டு வந்தார். அங்குள்ள ஒரு வீட்டிற்குச் சென்று குடிப்பதற்கு தண்ணீர் கேட்டனர்.
அவ்விட்டு பெண்மணி தங்கச் செம்பில் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தாள். அவர்கள் குடித்து முடித்ததும் செம்பை வீசி எறிந்து விட்டாள்.
தர்மர் அவளிடம், “தங்கச் செம்பை பத்திரமாக வைத்திருக்க வேண்டாமா? தெருவில் வீசி எறிந்துவிட்டீர்களே,” என ஆச்சரியமாகக் கேட்டார்.
அதற்கு அந்த பெண்மணி, “”எங்கள் நாட்டில் ஒரு முறை பயன்படுத்திய பொருளை மறுமுறை பயன்படுத்துவதில்லை,” என அலட்சியமாக சொல்லிவிட்டு போய்விட்டாள்.
அந்நாட்டின் செல்வச் செழிப்பை எண்ணி வியந்தார் தர்மராஜன்.
அவர்கள் மகாபலியின் அரசவைக்கு சென்றனர்.
கண்ணபிரான் தர்மரை மகாபலியிடம் அறிமுகப்படுத்தி, “இவர் தான் இவ்வுலகிலேயே அதிக தர்மம் செய்தவர், பெயரே தர்மர்,” என்றார்.
மகாபலி தர்மரின் முகத்தில் கூட விழிக்கவில்லை. “கண்ணபிரானே! தாங்கள் சொல்வதெல்லாம் சரி தான். என் நாட்டு மக்களிடம் உழைப்புக்கு பஞ்சமில்லை.
எல்லோரிடமும் செல்வம் குவிந்துகிடக்கிறது. எனவே “பிச்சை’ என்ற சொல்லுக்கே இடமில்லை.
அதனால் “தர்மம்’ என்ற வார்த்தைக்கும் இங்கு அவசியமில்லை.
எனவே அவர்கள் தானம் பெற வேண்டிய அவசியமும் இல்லை.
இவரது நாட்டில் ஏழைகள் அதிகமாக இருக்கிறார்கள் போலும். எனவே தான் எல்லோரும் தானம் கேட்டு வருகின்றனர்.
இவ்வளவு ஏழைகளை தனது அரசாட்சியின் கீழ் வைத்திருக்கும் இந்த தர்மரின் முகத்தைப்பார்க்க வெட்கப்படுகிறேன்,” என்றார்.
தனது ஆட்சியின் நிலைமையை நினைத்து தலைகுனிந்தார் தர்மராஜா.
தர்மம் என்ற பெயரில் இலவசங்களை வழங்கி சோம்பேறிகளை பெருக்கும் நாடு தலைகுனியத்தான் வேண்டும்.
சிறுகதைகள்
தன்னிடம் உள்ளதைத்தானே பிறருக்கு தருவான் | சிறுகதை
நீயும் (கொஞ்சமாவது) முயற்சி செய் | சிறுகதை
போக்குவரத்து விதிகளை மீறினால்? சிறுகதை
எந்த வியாதியாக இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும் | சிறுகதை
பொறுமை தான் உறவுகள் நீடிக்கக் காரணம் | சிறுகதை
தொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது
சிந்தனைகள்
எது சின்ன பாவம்? எது பெரிய பாவம்? | சிந்தனைகள்
அனைவரும் பின்பற்ற வேண்டிய நாகரிகங்கள்
சிந்தித்து செயல்பட்டால் வெற்றி உறுதி
இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது
மனிதனின் வெற்றிகள் | சிந்தனைகள்
நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே | சிந்தனைகள்
எதுக்குங்க நம்ம முன்னோர்கள் போராடி சுதந்திரம் வாங்கினாங்க
நகைச்சுவை
கல்யாணம் பண்ணவனுக்கு ஏதுடா நிம்மதி? | நகைச்சுவை
பேருந்தில் இருவருக்கு இடையே சண்டை | நகைச்சுவை
எலிப்பொரியும் எஜமானியும் – நீதி கதை
மன்னரின் பணிவு கண்டு வியந்த அமைச்சர்
நாம் உயபயோகிக்கும் பணம் எங்கெல்லாம் செல்கிறது?
புத்திசாலி அரசனின் சாமர்த்தியம்
சமையலில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத செயல்கள்
குளிர்பதனப்பெட்டி (ஃபிரிட்ஜ்) பராமரிப்பு பற்றிய சில தகவல்கள்
நமது வாழ்க்கை முறையில் மாற்றம் தேவை
அச்சம் ஒருவனை முட்டாளாக்கிவிடும்
வாழ்க்கையில் துன்பம் துயரம் வந்தால்?
ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயிலுக்குப் போய் இருக்கிறீர்களா?
ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார்
புதுசா எதாவது வாங்கும்போது உள்ள இருக்கற சிலிக்கா ஜெல் பாக்கெட்டை தூக்கி போடாதீங்க
பணம் என்பது வெறும் காகிதம் மட்டுமே
மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன ?
தீங்கு இல்லாத விவசாயத்தை மேற்கொள்வோம்
உலகில் இலவசம் என்று எதுவும் இல்லை
நமது முன்னேற்றத்தை தடுக்கும் ஏழு தடைகள்
இது ஒரு சுலபமான புதிர் – முயற்சியுங்கள்
எண்ணங்கள் அழகானால், எல்லாம் அழகாகும்
பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….?
ஏன் ரயிலில் மட்டும் நீங்கள் விரும்பிய இருக்கையை தேர்வு செய்ய முடியாது என தெரியுமா?
வாழ்க்கையின் பயனுள்ள குறிப்புகள்
நானூம் அந்த சமயத்தில் கண்னை மூடிக்கொன்டிருந்தேன்
பல இந்துக்கள் கூட அறியாத இந்துக் கடவுள்களின் அற்புதங்கள்
கிரைய பத்திரம் பதியும் போது கவணிக்க வேண்டிய 16 விசயங்கள்
நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல்…
உண்மையான அன்பை பிறருக்குக் கொடு
சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்
உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை
வாழ்க்கையில் எல்லாரும் ஒன்று தான்
ஆனைக்கு (ஆ+நெய்) ஒரு காலம் வந்தால்… பூனைக்கு (பூ+நெய்) ஒரு காலம் வரும்…இது ஒரு பழமொழி
பெண்களைப் பற்றி மற்ற நாட்டினரின் பொன் மொழிகள்
2020 ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு