நாலடியார்
நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல்.
பதினெண் கீழ்கணக்கு நூல்களில் உள்ள ஒரே தொகை நூலாகும்.
மேலும் பதினென் கீழ்கணக்கு நூல்களுல் திருக்குறளுக்கு அடுத்து புகழ் பெற்ற நூல் நாலடியாராகும்.
இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது.
இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது.
இதனால் இது நாலடி நானூறு எனவூம் பெயர் பெறும்.
பல சந்தர்ப்பங்களில் இது புகழ் பெற்ற தமிழ் நீதி நூலான திருக்குறளுக்கு இணையாகப் பேசப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது.
வாழ்க்கையின் எளிமையான விடயங்களை உவமானங்களாகக் கையாண்டு நீதி புகட்டுவதில் நாலடியார் தனித்துவம் பெற்று விளங்குகிறது.
நாலடியாரின் மற்றொரு சிறப்புப் பெயர் நாலடி நானூறு ஆகும். இதனை இயற்றியவர் சமண முனிவர் ஆவார்.
நாலடியாரை தொகுத்தவர் – பதுமனார்.
நாலடியாரை முப்பாலாக பகுத்தவர் – தருமர்
நாலடியாருக்கு உரை கண்டவர்கள் – பதுமனார், தருமர்
நீதிகளைக் கூறுவதில் திருக்குறளும் நாலடியாரும் ஏறக்குறைய ஒரே முறையைப் பின்பற்றுகின்றன.
திருக்குறளைப் போன்றே நாலடியாரும், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகளை உடையதாக விளங்குகிறது.திருக்குறள் இரண்டு அடிகளில் சொல்ல, நாலடியார் நான்கு அடிகளில் சொல்கிறது.
நாலடியாரில் மொத்தம் 12 இயல்கள் உள்ளன.
நாலடியாரில் துறவறவியல் முதலில் உள்ள இயல் ஆகும்.
திருக்குறள் ஒரே ஆசிரியரால் இயற்றப்பட்டது.
நாலடியாரோ சமண முனிவர் நானூறு பேர் பாடிய வெண்பாக்களின் தொகுப்பாகும்.
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி’, ‘சொல்லாய்ந்த நாலடி நானூறும் நன்கு இனிது’, ‘பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில்’ என்கிற கூற்றுகள் இதன் பெருமையை திருக்குறளுக்கு இணையாக எடுத்தியம்புவன.
திருக்குறளைப் போலவே அறத்துப்பால், பெருட்பால், காமத்துப்பால் என மூன்று பிரிவுகள் உண்டு.
‘கல்வி கரையில கற்பவர் நாள்சில’ – இந்நூலின் குறிப்பிடத்தக்க பாடல் வரிகளுல் ஒன்று
முத்தரையரைப் பற்றி நாலடியார் கூறுகிறது.
ஜி.யு.போப் அவர்கள் நாலடியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
நாலடியாரில் உள்ள அதிகாரங்கள்
- அறத்துப்பால் – 13 அதிகாரங்கள்
- பொருட்பால் – 24 அதிகாரங்கள்
- காமத்துப்பால் – 3 அதிகாரங்கள்
சிறப்புப்பெயர்-
வேளான்வேதம், நாலடி நானூறு