புறத்திணைகள் மொத்தம் 12 ஆகும்
வெட்சித்திணை | பகைவர் ஆநிரைகளை கவர்வது |
கரந்தைத்திணை | பகைவர் கவர்ந்து சென்ற ஆநிரைகளை மீட்டு வருவது |
வஞ்சித்திணை | பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதியது |
காஞ்சித்திணை | தன் நாடைடைக் கைப்பற்ற வந்த மாற்றார்களை தடுத்துப் போரிடல் |
நொச்சித்திணை | பகைவன் உள்ளே நுழையாதவாறு மதிலைக் காப்பது |
உழிஞைத்திணை | பகைவர் மதிலை நாற்புறமும் வளைத்துக் கைப்பற்றுதல் |
தும்பைத்திணை | அரசர்கள் இருவரும் எதிர் எதிரே நின்று போர் புரிவது |
வாகைத்திணை | அரசன், தன் பகைவனை வெல்லுதல் |
பானாண்திணை | மன்னனின் கல்வி, வீரம், புகழ், அருள் முதலியவற்றைப் போற்றிக் கூறுவது |
பொதுவியல்திணை | வெட்சி முதல் பாடாண் வரை கூறாத பொதுவான கருத்துக்களைக் கூறுவது |
கைக்கிளை | ஒருதலைக் காமம். ஆண்பாற்கூற்று, பெண்பாற்கூற்று |
பெருந்திணை | பொருந்தாக்காமம். பெண்பாற்கூற்று, இருபாற்கூற்று. |
பொதுவியல் திணை
வெட்சி முதல் பாடாண் இறுதியாகத் தொல்காப்பினார் கூறும் புறத்திணைகளுள் கூறப்படாத செய்திகளையும், அத்திணைகளுக்குப் பொதுவான செய்திகளையும் கூறுவது பொதுவியல் திணையாகும்.