1885 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ஆங்கிலேய அதிகாரியான ஆலன் ஆக்டோவியன் ஹியூம் என்பவரின் ஆலோசனையின் பேரில் இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது.

1885 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தொடக்க காலத்தில் இந்தியாவில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவில்லை.

அப்போது இதன் குறிக்கோள் கல்வி கற்ற இந்தியர்களுக்கு அரசில் பெரும் பங்கு வாங்கி தருவது தான்.

உமேஷ் சந்திர பானர்ஜி, தாதாபாய் நௌரோஜி, ஆலன் ஆக்டவியன் ஹியூம், சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் வில்லியம் வெட்டர்பர்ன் ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முதல் தலைவராக, பம்பாயில் 1885 டிசம்பரில் நடந்த கூட்டத்தில் உமேஷ் சந்திர பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதில் 72 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

இதில் 2 பேர் மட்டுமே முஸ்லீம்கள்.

முதல் கூட்டம் புனேயில் நடப்பதாக இருந்தது, ஆனால் பிளேக் என்னும் கொள்ளை நோய் புனேயில் இருந்ததால் அக்கூட்டம் பம்பாய்க்கு மாற்றப்பட்டது.

இதன் இரண்டாம் கூட்டம் 1886 டிசம்பர் 27 ல் நடைபெற்றது. இதில் 436 பேர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டின் தலைவராக தாதாபாய் நௌரோஜி அறிவிக்கப்பட்டார். இவரின் முயற்சியால் “Indian National Congress” என்று பெயர் மாற்றப்பட்டது. இந்த மாநாட்டில் சுரேந்திரநாத் பானர்ஜியின் “Indian National Union” காங்கிரசுடன் இனைக்கப்பட்டது.

முன்றாவது மாநாடு சென்னையில் 1887 டிசம்பர் 27 ல் நடைபெற்றது.

பிரித்தானிய அரசின் எதிர்ப்பு காரணமாக காங்கிரஸின் கொள்கை மாற்றம் கண்டது, இக்கட்சி விடுதலைப்போரில் தீவிரம் காட்ட தொடங்கியது.

1907ல் காங்கிரஸில் தீவிரபோக்குடையோர், மிதபோக்குள்ளோர் என 2 குழுக்கள் உருவாகின. தீவிரபோக்குடையோர் பால கங்காதர திலகர் தலைமையிலும், மிதபோக்குடையோர் கோபால கிருஷ்ண கோகலே தலைமையிலும் இயங்கினர்.

பாலகங்காதர திலகரின் செல்வாக்கால் காங்கிரஸ் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த பெரும் இயக்கமாக உருவாகியது, இலட்சக்கணக்கான மக்களை ஆங்கிலேயருக்கு எதிராக திரட்டியது.

இந்திய விடுதலைப்போரில் முதன்மையான இடம்பிடித்த பால கங்காதர திலகர், கோபால கிருஷ்ண கோகலே, லாலா லஜபத் ராய், பிபின் சந்திர பால், முகமது அலி ஜின்னா, தாதாபாய் நௌரோஜி, வ. உ. சிதம்பரம் பிள்ளை போன்ற தலைவர்களை காங்கிரஸ் கட்சி உருவாக்கியது.

காங்கிரசின் வரலாற்றை “பட்டாபி சித்தாராமைய” எழுதி உள்ளார்.

இவா் காங்கிரசின் தோற்றம் ஒரு மர்மமாகவே உள்ளது என்று கூறிப்பிட்டு உள்ளார்.

உமேஸ் சந்திர பானர்ஜி காங்கிரசின் தோற்றம் பற்றி “The Saftey Wall Theory “-யை கூறினார். இதன் படி ஆங்கிலேயர்கள் தமது ஆட்சியை பாதுகாத்து கொள்வதற்காக “Allan Octavian Hume”-யின் உதவியுடன் காங்கிரசை உருவாக்கினர் என்று கூறுகிறார்.

1920 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், விஜயராகவாச்சாரியாரின் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மகாத்மா காந்தியாலும், இந்திய தேசிய காங்கிரசாலும் முன்னெடுக்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் செப்டம்பர் 1920 இல் தொடங்கி பிப்ரவரி 1922 வரை தொடர்ந்தது.

1922 ஆம் ஆண்டு, இந்திய தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்து சுயராஜ்ய கட்சி உருவான இது காலப்போக்கில் காங்கிரசுடன் சேர்ந்து பணியாற்றத் தொடங்கியது.

இந்திய தேசிய காங்கிரசு, சுயாட்சி கட்சி, முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் சைமன் குழுவினை புறக்கணிக்க முடிவு செய்தன. 1928 ஆம் ஆண்டு சைமன் குழு இந்தியாவுக்கு வந்த போது அதனை எதிர்த்து போராட்டங்கள் நடத்தினர்.

1929 ஆம் ஆண்டு லாகூக் காங்கிரஸ் மாநாடு ஜவஹர்லால் நேரு தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டின் முக்கிய நோக்கம் பூரண சுயராஜ்ஜியம் ஆகும்.

1930, ஜனவரி, 26 – அன்று லாகூர் காங்கிரஸ் மாநாட்டின் ஏற்பட்ட தீர்மாணத்தின் படி, நாடு முழுவதும் விடுதலை நாளாக கொண்டாடப்பட்டது.

1930, மார்ச்சு 12, இல் குஜராத் மாநிலத்திலுள்ள தண்டியில் தடையை மீறி உப்பெடுக்கும் நடைப்பயணமாகத் துவங்கியது. 1930 ஜனவரி 30 ஆம் நாள் இந்திய தேசிய காங்கிரசு அறிவித்த முழு விடுதலை என்ற விடுதலைப் பிரகடனத்திற்குப் பிறகு ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து அமைப்பு ரீதியாகச் செய்யப்பட்ட முதல் நடவடிக்கையாகும்.

1931 ஆம் ஆண்டு, காந்தி – இர்வின் ஒப்பந்தம் நடைபெற்றது. இதனால், சட்டமறுப்பு இயக்கத்தை சட்டமறுப்பு இயக்கத்தை கைவிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது. மேலும், இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் காங்கிரஸ் கலந்து கொள்ளும் என ஒத்துக்கொள்ளப்பட்டது.

அதற்கு கைமாறாக, உப்பு சத்தியாகிரகத்தில் கைதானவர்கள் அனைவரையும் விடுதலை சைய்தல் மற்றும் உப்பு வரி சட்டத்தினை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இரண்டாவது வட்ட மேசை மாநாடு நடைபெற்றது. காந்தி கைது செய்யப்பட்டதை அடுத்து, காங்கிரஸ் இம்மாநாட்டில் காங்கிரஸ் இம்மாநாட்டில் கலந்துகொள்வதை தடை செய்தது. இதனால் சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் ஆரம்பமானது.

1932 ஆம் ஆண்டு, மூன்றாவது வட்ட மேசை மாநாடு இங்கிலாந்திலுள்ள லண்டனில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவரகள் யாரும் பங்குபெறவில்லை. இதனால் இம்மாநாடு தோல்வியுற்றது.

1937 ஆம் ஆண்டு, மாகாணங்களின் முதலாவது காங்கிரஸ் அமைச்சரவை நடைபெற்றது.

1942 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 8, அன்று இந்திய தேசிய காங்கிரஸ் பம்பாயில் கூட்டிய மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லத் தீர்மானம் நிறைவேற்றியது. இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார்.

இந்திய தேசிய காங்கிரஸில் நடைபெற்ற கூட்டத்தொடர்கள்

ஆண்டுஇடம்தலைமை
11885மும்பைW.C.பானர்ஜி
21886கல்கத்தாதாதாபாய் நௌரோஜி
31887சென்னைபக்ருதின் தியாப்ஜி (முதல் முஸ்லிம்)
41888அலகாபாத்ஜார்ஜ் பூலே (முதல் வெளிநாட்டவர்)
51892அலகாபாத் W.C.பானர்ஜி
61893லாகூர்தாதாபாய் நௌரோஜி
71895பூனா, அலகாபாத்எஸ்.என்.பானர்ஜி
81894சென்னைMr.வெப்
91902அலகாபாத்எஸ்.என்.பானர்ஜி
101903சென்னைலால்மோகன் போஸ்
111905வாரனாசிகோபாலகிருஷ்ண கோகலே
121906கல்கத்தாதாதாபாய் நௌரோஜி
131907சூரத்ராஸ்பிகாரி போஸ் (சூரத் INC பிளவு)
141908சென்னைராஸ்பிகாரி போஸ்
151909லாகூர்மதன்மோகன் மாளவியா
161914சென்னைபூபேந்திரநாத்
171917கல்கத்தாஅன்னிபெசன் (முதல் வெளிநாட்டுப் பெண் – காங்கிரஸ் இணைந்தது)
181918டெல்லிமதன்மோகன் மாளவியா
191919அமிர்தசரஸ்மோதிலால் நேரு
201920கல்கத்தாலாலா லஜபதிராய் (ஒத்துழையாமை இயக்கம்)
211924பெல்காம்மகாத்மா காந்தி
221925கான்பூர்சரோஜின் நாயுடு (முதல் இந்தியப் பெண்)
231928கல்கத்தாமோதிலால் நேரு
241929லாகூர்ஜவஹர்லால் நேரு
251930மாநாடு நடைபெறவில்லைசட்டமறுப்பு இயக்கம்
261931கராச்சிவல்லபாய் பட்டேல்
271936லக்னோஜவஹர்லால் நேரு
281937ஃபய்ஸ்பூர்ஜவஹர்லால் நேரு
291938ஹரிபூர்எஸ்.சி.போஸ்
301939திரிபூரிஎஸ்.சி.போஸ்
311940ராம்கார்மௌலானா அபுல் கலாம்
321946மீரட்ஆச்சார்ய ஜே.பி.கிரிபாலினி
331948ஜெய்பூர்பட்டாபி சீதாராமையா (கடைசி மாநாடு)



சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)

மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)

கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)




கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரை



கி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை


கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை


கி.பி. 1951 முதல்



புதிய கற்காலம்


சங்ககால தமிழ் புலவர்கள்

கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)