இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆன இது ஆசியாவில் அமைந்துள்ளது.

உலகிலேயே ஒப்பற்ற மிகப்பெரிய, மிகவுயர்ந்த, மலைத்தொடர் இந்த இமயமலைத் தொடர்தான்.

இமயமலைத்தொடர் உலகின் சில மிக உயர்ந்த சிகரங்களின் இருப்பிடமாகும்.

இதில் எவரெஸ்ட் சிகரமும் ஒன்றாகும்.

இமயமலையிலுள்ள ஏவரெஸ்ட் சிகரத்தை முதலில் அடைந்தவர் –

எப்பொழுதும் உறைபனி மூடி இருக்கும்.

இந்திய துணைக்கண்டத்தின் வட எல்லையாக அமைந்துள்ளது.

இது மேற்கே காஷ்மீர்-சிங்காங் பகுதி முதல் கிழக்கே திபெத்-அருணாசல பிரதேசம் பகுதி வரை நீண்டு இருக்கிறது.

இமயமலைத்தொடரில் நூற்றுக்கு மேற்பட்ட சிகரங்கள் உள்ளன.

இதில் சிலவற்றின் உயரம் 7200 மீட்டருக்கு மேலாகும்.

இதற்கு மாறாக, ஆசியாவுக்கு வெளியே உள்ள மிகப்பெரிய சிகரம் அக்கோன்காகுவா அன்டேஸ் மலைத்தொடரில் உள்ளது. இதன் உயரம் 6961 மீட்டராகும்.

மூன்று இணையான உப தொடர்களைக் கொண்டுள்ள இது ஐந்து நாடுகளில் பரவியுள்ளது.

பூடான், இந்தியா, நேபாளம், சீனா மற்றும் பாகிஸ்தான் என்பனவான அவற்றில் முதல் மூன்று நாடுகளில் அதிகமான மலைத்தொடர் பரவியுள்ளது.

இமயமலையின் வடக்கே திபத்திய பீடபூமியையும், வடமேற்கே காரகோரம் மற்றும் இந்துக்குசு மலைத்தொடரையும் தெற்கே சிந்து-கங்கை சமவெளியையும் எல்லையாகக் கொண்டுள்ளது.

உலகின் சில பெரிய நதிகளான சிந்து, கங்கை, மற்றும் பிரமபுத்திரா உற்பத்தியாகிறது.

இந்நதிகளின் மொத்த வடிகால் 60 கோடி மக்களின் இருப்பிடமாகும்.

இமயமலை தெற்காசிய மக்களின் கலாச்சாரத்தை வடிவமைத்துள்ளது.

இமயமலையில் உள்ள பல சிகரங்கள் இந்து மற்றும் புத்த மதங்களில் புனிதமாகக் கருதப்படுகிறது.

இமயமலை மேற்கு – வடமேற்கு பகுதியிலிருந்து கிழக்கு – வடகிழக்கு பகுதிவரை 2400 கிலோமீட்டர் வட்டவில்லாக அமைந்துள்ளது.

இதன் மேற்கில் உயர்ந்த சிகரம் நங்கா பர்பத் சிந்து நதியின் வடக்கு வளைவில் அமைந்துள்ளது, இதன் கிழக்கில் உயர்ந்த சிகரம் நம்சா பர்வா பரம்ஹபுத்ராவின் பெரிய வளைவில் மேற்கே அமைந்துள்ளது.

மலைத்தொடரின் அகலம் மேற்கில் 400 கிலோமீட்டரும் கிழக்கில் 150 கிலோமீட்டரும் ஆகும்.

இமயமலைப் பகுதியில் எந்தவொரு எரிமலையும் இல்லை.

எவரெஸ்ட் சிகரத்தை இரண்டு முறை ஏறிய இந்தியர் – நவாங் கோம்பு (Nwang Gombu)

1984, மே, 23 – ஆம் தேதி 8847.7 மீட்டர் உயரம் உள்ள எவரெஸ்ட் கொடுமுடியில் இந்திய தேசிய கோடியை பச்சேந்திரி பால் பறக்கவிட்டார். பச்சேந்திரி பால், உலகின் மிக உயரமான மலைச்சிகரமான இமயமலையில் உள்ள எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்த முதல் இந்திய பெண் ஆவார்.

சிகரம்நாடுஉயரம்
எவரெஸ்ட்நேபாளம்8848 மீ
காட்வின் ஆஸ்டின் அல்லது K2இந்தியா8611 மீ
கஞ்சன் ஜங்காஇந்தியா8586 மீ
மக்காலூநேபாளம்8481 மீ
தௌலகிரிநேபாளம்8172 மீ
நங்க பர்வதம்இந்தியா8126 மீ
அன்ன பூர்ணாநேபாளம்8078 மீ
ந்த்தா தேவிஇந்தியா7817 மீ
காமெட்இந்தியா7756 மீ
நம்ச பர்வதம்இந்தியா7756 மீ
குருலா மருதாத்தாநேபாளம்7728 மீ

இமயமலையின் நீள்வெட்டு பிரிவுகள்

  • காஷ்மீர், பஞ்சாப், இமாச்சல் இமயமலைகள்: சிந்து மற்றும் சட்லேஜ் நதிகளக்கிடையே அமைந்துள்ளன.
  • குமாயூன் இமயமலைகள் : சட்லெஜ் மற்றும் காளி ஆறுகளுக்கிடையே அமைந்துள்ளது.
  • மத்திய நேபாள இமயமலைகள் : காளி மற்றும் திஸ்தா ஆறுகளுக்கிடையே அமைந்துள்ளது.
  • அசாம் கிழக்கு இமயமலைகள் : திஸ்தா மற்றும் திகாங் ஆறுகளுக்கிடையே அமைந்துள்ளது.