| குறிஞ்சி | முல்லை | மருதம் | நெய்தல் | பாலை |
தெய்வம் | முருகன் | திருமால் | இந்திரன் | வருணன் | துர்க்கை |
மக்கள் | சிலம்பன், வெற்பன், பொருப்பன், கொடிச்சி, குறத்தி | குறும்பொறை, நாடன், தோன்றல், கிழத்தி, மனைவி | ஊரன், மகிழ்நன், கிழத்தி, மனைவி | துறைவன், சேர்ப்பன் | மீளி, விடலை, காளை, எயிற்றி |
குறவர், குறத்தியர், கானவர் | ஆயர், ஆய்ச்சியர், இடையர், இடைச்சியர் | கடையர், கடைசியர்,உழவர், உழத்தியர், நுளைச்சியர் | பரதவர், பரத்தியர், நுளையர் | எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர் |
பறவை | கிளி, மயில் | கானக்கோழி | நாரை, நீர்க்கோழி, அன்னம், குருகு | நீர்க்காக்கை | கழுகு, பருந்து, புறா |
விலங்கு | புலி, கரடி, பன்றி | முயல், மான் | எருமை, நீர்நாய் | சுறா | வலிமை இழந்த புலி, செந்நாய் |
ஊர் | சிறுகுடி | பாடி, சேரி | பேரூர், மூதூர் | பட்டினம், பாக்கம் | குறும்பு |
நீர் | சுனை நீர், அருவி நீர் | கான்யாறு | மனைக்கிணறு, பொய்கை | உவர்நீர்க் கேணி, உவர்க்கழி | நீர் வற்றின சுனை, நீர்வற்றிய கிணறு |
பூ | காந்தள், குறிஞ்சி, வேங்கை | முல்லை, குல்லை, பிடவம், தோன்றி | தாமரை, கழுநீர், குவளை | தாழை, நெயதல், புன்னை | மா, குரா, பாதிரி |
மரம் | அகில், சந்தனம், வேங்கை | கொன்றை, குருந்து, காயா | மருதம், வஞ்சி, காஞ்சி | புன்னை, தாழை | இருப்பை, ஓமை, உழிஞை, பாலை |
உணவு | தினை, மலைநெல், மூங்கிலரிசி | வரகு, சாமை, முதிரை | செந்நெல், வெண்ணெலரிசி | மீனும், உப்பும் விற்றால் பெறும் பொருள் | வழிப்பறி செய்த பொருள், கொள்ளையடித்த பொருள் |
பறை | வெறியாட்டுப்பறை, தொண்டகப்பறை | ஏறுகோட் பறை | மணமுழா, நெல்லரிகிணை | மீன்கோட்பறை | போர்ப்பறை, ஊரெறிபறை |
பண் | குறிஞ்சிப்பண் | முல்லைப்பண் (சாதாரி) | மருதப்பண் | நெய்தல்பண் (செவ்வழி) | பாலைப்பண் (பஞ்சுரம்) |
யாழ் | குறிஞ்சி யாழ் | முல்லை யாழ் | மருத யாழ் | விளரி யாழ் | பாலை யாழ் |
தொழில் | தேனெடுத்தல், கிழங்ககழ்தல், வெறியாடல், தினைகாத்தல் | வரகு விதைத்தல், களை பறித்தல், ஆநிரை மேய்த்தல், குழலூதல், காளை தழுவுதல் | நெல்லரிதல், களை பறித்தல், கடா விடுதல் | மீன் பிடித்தல், உப்பு விற்றல் | நிரை கவர்தல், சூறையாடல், வழிப்பறி செய்தல் |