காமராசர் (காமராஜர்) (சூலை 15, 1903 – அக்டோபர் 02, 1975) தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவராவார்.

காமராஜர் அவர்கள் பிறந்த ஊர் விருதுநகர் ஆகும்.

1936 – காங்கிரஸ் கட்சியின் செயலாளராக காமராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டார்.

1940 – விருதுநகர் நகராட்சித் தலைவராக காமராஜ் அவர்கள் ஆனார்.

1946 முதல் 1952 வரை சென்னை மாகான காங்கிரஸ் தரைவராக காமராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டார்.

இவர் 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆனார்.

1956 – ஆம் ஆண்டு, சாத்தனூர் அணை தென்பெண்ணையாற்றின் குறுக்கே காமராஜர் அவர்களால் கட்டப்பட்டது.

இவர் ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்தார்.

தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர்.

இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ்வர்.

இவர் “கருப்பு காந்தி” என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார்.

காமராசரின் மறைவுக்கு பின், 1976 இல் இந்திய அரசு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கியது.

மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்றும், சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.


காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்


காமராஜரின் நட்பு