சூட்சும சக்திகளும் நமது உடலும், சூட்சம விஞ்ஞானத்தை உணர்வோம்!
- நமது மனம் எங்கு உள்ளது என்று தெரியுமா? நாம் எதை நினைக்கிறோமோ அங்கு நமது மனம் செல்கிறது; அதற்கு தூரம் தடை இல்லை. நாம் தீயவர்களை நினைக்கும்போது நமது சூட்சும சக்தி அவர்களுடன் இணைந்து நமது வலிமை குறைகிறது. இறைவனை எண்ணும்போது சூட்சும சக்தி வலிமை பெற்று நம்மை காக்கிறது.
- நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது.
- நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது.
- ஒவ்வொரு மனிதனுக்கும் சூட்சும சரீரம் உண்டு. இதுவே ஒளி உடல் எனப்படும்.
- சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணரப்படுகிறது.
- மகான்கள், சித்தர்களைச் சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும்.
- பல்வேறு நோய்களின் பதிவுகள் மனோ சரீரத்தில் பதிவாகி உள்ளது.
- சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் சமையல் செய்வது மூலமாக ருசியாக வெளிப்படுகிறது.
- மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராணசரீரம் குணப்படுத்துகிறது.
- மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழிகாட்டி.
- மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல. அவனின் சூட்சுமசக்தி காந்தசக்தி போல அவனைச் சுற்றி பாதுகாத்து வருகிறது.
- கோவில்களில், சித்தர் சமாதிகளில் மனித ஜிவனுக்கு ஜீவ சக்தி கிடைக்கிறது.
- மயக்கம் என்பது பௌதீக உடலுக்கும் சூட்சும உடலுக்கும் உள்ள தொடர்பின் பாதிப்பே ஆகும்.
- சிறுவர் சிறுமியர்களின் அருகில் இருப்பது, பெரியவர்களின் உடலில் இளமை சக்தி ஓட்டம் பெறுகும்.
- நோயாளிகளிடம் அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும்.
- மனதாலும் உடலாலும், இயற்கையை விட்டு விலகும் போது, தீராத களைப்பு ஏற்படும்.
- மனிதன் தலைகீழாக வளரும் மரம். மூளை என்ற வேர் அனைத்தும் தலையில் தான் உள்ளது.
- நமது உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஒருவித மொழியில் நம்முடன் பேசுகிறது.
- ஒரு மனிதனை புண்படச் செய்வது நூதனமான கொலைக்கு சமம்.
- மனிதனை தவிர மற்ற இனங்கள் சூட்சும உணர்வு மூலமே எதையும் அணுகுகிறது.
- நாம் விஞ்ஞான அறிவை மட்டும் பயன்படுத்தினால், மெய்ஞான அறிவை இழந்து விடுவோம்.
- நமது வீட்டில் பஞ்ச பூத பிராணசக்தி அனைத்து அறைகளிலும் ஓடிக்கொண்டிருக்க வேண்டும்.
- வலி என்பது உடலின் மொழி. அதை ஒரு போதும் மாத்திரையால் அமுக்க கூடாது.
- நிகழ்கால உணர்வுடன் இருக்க பழகுங்கள்.
- வலியை ஏற்று கொண்டு அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யுங்கள்.
- உடலின் உறுப்புக்கள் அனைத்தும் மனதுடன் சேர்ந்து இயங்குவதே ஆரோக்கியம். மனது நோயுற்ற பின்னரே உடல் நோயுறுகிறது.
- விவசாய நிலத்தில் தாயின் கருவறையில் உள்ளதை போன்ற பிராணசக்தி உள்ளது.
- நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாகவும், அசையும் தண்ணீரில் அதிகமாகவும் உள்ளது.
- நம் உடலில் எங்கெல்லாம் புதிய தண்ணீர் நுழைகிறதோ அங்கெல்லாம் காற்று பிராண சக்தி நுழைகிறது.
- தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது.
- அருவி நீரில் அதிக பிராணசக்தி உள்ளது.
- கடல்நீர் நம்முடைய பாவ தீய கர்ம வினைகளை உள்வாங்க கூடிய ஆற்றல் உள்ளது.
- உப்பு நீர் தெளித்து கழுவினால், சூட்சும தீய சக்திகள் நீங்கும்.
- கர்ப்பம் கொண்ட பெண் தீய எண்ணம் கொண்டவர்கள் பார்வையின் முன்னே செல்ல, பேச, தொடவோ கூடாது.
- மலர்ந்த முகத்துடன் மற்றவர்களை அணுகும் போது நமது சூட்சும சரீரத்தின் கவசம் பலம் பெறுகிறது.
- செயல்குறைந்த உடல் உறுப்பை, அன்புடன் உணர்ந்தால் சக்தி பெற துவங்குகிறது.
- ஒரு நாளில் சில நிமிடங்களாவது, வெட்ட வெளியில் செருப்பின்றி நடக்கவும்.
- பிறந்த குழந்தையும், நீடித்த நோயாளியும் ஒரே அறையில் தூங்குவது நல்லதல்ல.
- சூரிய ஒளியில் காயவைத்த துணி, பிராண உடலில் உள்ள பிராண ஒட்டுண்ணிகளை அழிக்கிறது.
- மனது மாயையில் விழுகிறது. சூட்சும சரீரமோ எப்போதும் விழிப்புணர்வோடு உள்ளது.
- மனித உடல் இறப்பதற்கு முன், அவனது பிராண சரீரம் இறக்க துவங்குகிறது.
- தீட்சண்யமான தீய பார்வை கர்ப்ப சிதைவை ஏற்படுத்தும்.
- நாம் பயன்படுத்தும் பொருள்களில், நமது எண்ண பதிவு ஏற்படுகிறது.
- நாம் தும்மும் போது, அதன் அதிர்வு, தாயின் நாபிச்சக்கரத்தை சென்று தாக்குகிறது.
- தொடர்ந்த ஒரே எண்ணம், செயல் வடிவம் பெறும்.
- தீய எண்ணங்கள் தீய நீரை உடலில் சுரக்க செய்கிறது.
- பிராண சக்தி இல்லா உணவு, உடலுக்கு சுமையே.
- போதை பொருள், நரம்பு மண்டலத்தை அழிக்கும்.
- தீயவர்களை சூழ்ந்து தீய எண்ணமும், நல்லவர்களை சூழ்ந்து நல்ல எண்ணமும் இருக்கும்.
- தூக்கம் என்பது, விழிப்புணர்வு அற்ற தியானம். தியானம் என்பது, விழிப்பணர்வுடன் கூடிய தூக்கம்.
சூட்சம விஞ்ஞானத்தை உணர்வோம்!
சைவம் வளர்த்தோர்
சேக்கிழார்
திருமூலர்
அருணகிரிநாதர்
குமரகுருபரர்
12 ஆழ்வார்கள்
பொய்கையாழ்வார்
பூதத்தாழ்வார்
பேயாழ்வார்
திருமழிசை ஆழ்வார்
நம்மாழ்வார்
மதுரகவி ஆழ்வார்
குழசேகராழ்வார்
பெரியாழ்வார்
ஆண்டாள் நாச்சியார்
தொண்டரடிப் பொடியாழ்வார்
திருப்பாணாழ்வார்
திருமங்கையாழ்வார்
சித்தர்கள்
திருமூலர்
இராமதேவர்
கும்பமுனி
இடைக்காடர்
தன்வந்திரி
வான்மீகி
கமலமுனி
போகநாதர்
மச்சமுனி
கொங்கணர்
பதஞ்சலி
நந்திதேவர்
போதகுரு
பாம்பாட்டிச் சித்தர்
சட்டைமுனி
சுந்தரானந்த தேவர்
கோரக்கர்
அகப்பேய் சித்தர்
அழுகணிச் சித்தர்
ஆதிநாதர் வேதாந்தச் சித்தர்
சதோகநாதர்
இடைக்காட்டுச் சித்தர்
புண்ணாக்குச் சித்தர்
ஞானச்சித்தர்
மௌனச் சித்தர்
பாம்பாட்டிச் சித்தர்
கல்லுளி சித்தர்
கஞ்சமலைச் சித்தர்
நொண்டிச் சித்தர்
விளையாட்டுச் சித்தர்
பிரமானந்த சித்தர்
கடுவெளிச் சித்தர்
சங்கிலிச் சித்தர்
திரிகோணச்சித்தர்
வான்மீகர்
பதஞ்சலியார்
துர்வாசர்
ஊர்வசி
சூதமுனி,
வரரிஷி
வேதமுனி
கஞ்ச முனி
வியாசர்
கௌதமர்
காலாங்கி
கமலநாதர்
கலசநாதர்
யூகி
கருணானந்தர்
சட்டைநாதர்
பதஞ்சலியார்
கோரக்கர்
பவணந்தி
புலிப்பாணி
அழுகணி
பாம்பாட்டி
இடைக்காட்டுச் சித்தர்
கௌசிகர்
வசிட்டர்
பிரம்மமுனி
வியாகர்
தன்வந்திரி
சட்டைமுனி
புண்ணாக்கீசர்
நந்தீசர்
சப்த ரிஷிகள்.
அகப்பேய்
கொங்கணவர்
மச்சமுனி
குருபாத நாதர்
பரத்துவாசர்
கூன் தண்ணீர்
கடுவெளி
ரோமரிஷி
காகபுசுண்டர்
பராசரர்
தேரையர்
புலத்தியர்
சுந்தரானந்தர்
திருமூலர்
கருவூரார்
சிவவாக்கியர்
தொழுகண்
பால சித்தர்
ஶ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள்
நவநாதர் (அ. சத்ய நாதர், ஆ. சதோக நாதர், இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ. வகுளி நாதர், ஊ. மதங்க நாதர், எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர், ஐ. கோரக்க நாதர்)
அஷ்ட வசுக்கள்
உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம்
அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில கருத்துகள்
மிக உயரமான விமானத்தை உடைய தமிழக கோயில்கள்
மரண தீட்டைப் பற்றிய பொது விதிமுறைகள்
தெய்வங்களை பீடத்தில் அசையாமல் நிறுத்தும் `அஷ்ட பந்தன மருந்தில்’ என்னென்ன சேர்ப்பார்கள்?
விருட்சங்களும் தெய்வீக சக்திகளும்
அமாவாசையன்று வாசலில் ஏன் கோலம் போடக் கூடாது?
கடவுள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்?
தீட்டு என்கிறார்கள் இதன் உண்மையான அர்த்தங்கள் என்பது என்ன..?
அன்னதானத்தின் சிறப்பை கர்ணன் உணர்ந்த மகாபாரதக் கதை
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் பொன்வரிகள்
கோவில்களில் ஏன் புறாக்கள் வளர்க்கப்படுகின்றது?
274 சிவாலயங்களுக்கு செல்வதற்கான குறிப்புகளை கொண்டது இப்பதிவு
63 நாயன்மார்களின் வரலாற்றுச் சுருக்கம்
மகான் அகத்தியர் தன்னுடைய நூலில் சொன்ன மரணத்தைப்பற்றிய அபூர்வ ரகசியம்