பெரிய இந்தியப் பாலைவனம் என்று அழைக்கப்படும் தார்ப் பாலைவனம் இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது.
இது இந்தியாவின் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களிலும் மற்றும் பாகிஸ்தான் நாட்டிலும் பரவியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் பரவியிருக்கும் இப்பாலைவனத்தை, சோலிஸ்தான் பாலைவனம் என்று அழைக்கப்படுகிறது.
இப்பாலைவனத்தின் பெரும்பகுதி (61 சதவீதம்) ராஜஸ்தானிலேயே உள்ளது.
இப்பாலைவனத்தில் பிகானேர், ஜெய்சல்மேர், கங்காநகர் மற்றும் ஜோத்பூர் போன்ற பெரிய நகரங்களும், ஜெய்சல்மேர் கோட்டையும் அமைந்துள்ளது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய பாலைவனம் இது ஆகும். மேலும் ஆசியாவிலேயே வரண்ட பாலைவனம் இது ஆகும்.