1989, செப்டம்பர், 30 – அன்று, திருவண்ணாமலை மாவட்டம் அன்றைய வடஆற்காடு மாவட்டத்தில் இருந்து பிரிந்து அன்று முதல் இயங்கிவருகிறது.

இம்மாவட்டத்தின் வடக்கே வேலூர் மாவட்டமும் கிழக்கே காஞ்சிபுரம் மாவட்டமும் தெற்கே விழுப்புரம் மாவட்டமும் மேற்கே கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டமும் எல்லையாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் மிக அதிக பக்தர்கள் வருகைதரும கோயில்களில் திருவண்ணாமலையும் ஒன்று.

பண்டைய காலத்தில் அண்ணாமலை என்பது அடையமுடியாத மலை என்று பொருள்கொள்ளத்தக்கதாய் இருந்தது.

பின்பு இம்மலையின் புனிதத்தன்மையினால் இப்பெயருடன் “திரு” என்ற அடை மொழி முன்னொட்டாக சேர்த்து திருவண்ணாமலை என்று வழங்கப்படுகிறது.

இந்தியாவில் முக்கிய மற்றும் பாரம்பரியமான ஆன்மீகத் சைவத்தலமாக திருவண்ணாமலை விளங்குகிறது. அண்ணாமலை மலையும் அதன் மலைவலமும் தமிழர்களால் மிகவும் வணங்கப்பட்டு வருகிறது.

கட்டக்கலையிலும், பெருவிழாக்களினாலும் திருவண்ணாமலை கோயில் மிகப் புகழ்பெற்றுள்ளது.

ஆண்டு தோறும் நடக்கும் தீபத்திருவிழா தமிழகம் மட்டுமல்லாது தென்னிந்தியாவில் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

இவை தவிர்த்து ஆரணி, தேவிகாபுரம், வந்தவாசி போன்ற பகுதிகள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் முக்கிய கேந்திரமாக விளங்கி வந்துள்ளது.

சோழர்களின் கீழ் குறுநில மன்னராக விளங்கிய சம்புவராயர்கள் பின்பு படைவீட்டை தலைமையிடமாகக் கொண்டு தனிஅரசாட்சி அமைத்து ஆண்டுவந்துள்ளார்.

ஆரணியின் உள்ள கோட்டை கைலாசநாதர் கோயிலும் கோட்டை பகுதிகளும் அதற்கு சாட்சியாக விளங்குகின்றன.

சுற்றுலா

இம்மாவட்ட ஆன்மீகச் சுற்றுலாவிற்கு புகழ்பெற்றதாகும், இம்மாவட்டத்தின் தலைநகரில் அமைந்துள்ள திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில், படைவீடு ரேணுகாம்பாள் திருக்கோயில், தென்னாங்கூர் பாண்டு ரங்கன் திருக்கோயில், தேவிகாபுரம் பெரியநாயகி திருக்கோயில் போன்றவை புகழ்பெற்ற திருத்தலங்கள் ஆகும். இவை தவிர சாத்தனூர் அணை, பர்வதமலை, ஜவ்வாதுமலை போன்ற பொழுதுபோக்கு சுற்றுலாத்தலங்களையும், மாமண்டூர் குடைவரைக்கோயில்கள், திருமலை ஜெயின் கோயில், கூழமந்தல், பிரம்மதேசம் போன்ற பாரம்பரிய சுற்றுலா தலங்களும் அமைந்து இம்மாவட்டத்திற்கு அணி செய்கின்றன.



அணைகள்


ஆறுகள்