னல முன்னும், ணள முன்னும் தநக்கள்
1. நிலைமொழி ஈற்றில் னகரமோ லகரமோ நின்று வருமொழி முதலில் தகரம் வரின் அது றகரமாக மாறும். நகரம் வரின் அது னகரமாக மாறும்.
எ.கா :
தகரம் றகரமாதல்,
- பொன்+தீது = பொன்றீது
- கல்+தீது = கற்றீது
நகரம் னகரமாதல்,
- பொன்+நன்று = பொன்னன்று
- கல்+நன்று = கன்னன்று
2. நிலைமொழி ஈற்றில் ணகரமோ, ளகரமோ நின்று வருமொழி முதலில் கரம் வரின் அது டகரமாகவும், நகரம் வரின் அது ணகரமாகவும் மாறும்.
எ.கா :
தகரம் டகரமாதல்,
- மண்+தீது = மண்டீது
- முள்+தீது = முட்டீது
நகரம் ணதரமாதல்,
- கண்+நீர் = கண்ணீர்
- முள்+நன்று = முண்ணன்று
விதி :
“னலமுன் றனவும் ணளமுன் டணவும்
ஆகும் தநக்கள் ஆயுங் காலே ” நன்னூல் – 237