பக்சர் சண்டை அல்லது பக்சர் போர் (Battle of Buxar) 1764 இல் பக்சாரில், (பிகார்) நடைபெற்ற ஒரு சண்டை.
இதில் சர் ஹெக்டர் மன்ரோ தலைமையிலான பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் படைகள் முகலாயப் பேரரசர் இரண்டாம் ஷா ஆலம், அயோத்தி நவாப், வங்காள நவாப் ஆகியோரின் கூட்டணிப் படைகளை வென்றன. இதன் மூலம் கிழக்கு இந்தியாவில் கிழக்கிந்திய நிறுவனம் பலம் பொருந்திய ஆதிக்க சக்தியாக உருப்பெற்றது.
1757 இல் நடைபெற்ற பிளாசி சண்டையில் வெற்றியடைந்த கிழக்கிந்திய நிறுவனம் வங்காளத்தில் குறிப்பிடத்தக்க சக்தியாக மாறியது. பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடத் தொடங்கியது. குறிப்பாக வங்காளத்தின் நவாப் மீர் காசிமைத் தங்கள் கைப்பாவையாக்க முயன்றனர். ஆனால் மீர் காசிம் அவர்களது கம்பனி அதிகாரிகளின் கட்டளைகளை மீறி சுதந்திரமாகச் செயல்படத் தொடங்கினார்.
நிருவாகத்தில் சீருதிருத்தங்களை அறிமுகம் செய்தார்; தனது படைகளுக்கு ஐரோப்பிய முறைப்படி பயிற்சி அளிக்கத் தொடங்கினார். பிரித்தானியர் விருப்பப்படி இந்திய வர்த்தகர்கள் மீது கூடுதல் வரி விதிக்க மறுத்து விட்டார். இதனால் 1763 இல் கிழக்கிந்திய நிறுவனம் அவரைப் பதவியிலிருந்து விரட்டியடித்தது. அவுதிற்குத் தப்பியோடிய மீர் காசிம், அவாத் நவாபிடம் தஞ்சம் புகுந்தார். அதே நேரம் வாரிசுரிமைச் சண்டையால் டெல்லியை விட்டு வெளியேறியிருந்த முகலாயப் பேரரசர் இரண்டாம் ஷா ஆலமும் அவுதில் இருந்தார். இவ்விருவரது துணையுடன் அவத் நவாப் சுஜா உத்-தவுலா பிரித்தானியக் கட்டுப்பாட்டில் இருந்த வங்காளத்தின் மீது படையெடுத்தார்.
அக்டோபர் 23, 1764 இல் இரு தரப்புப் படைகளும் கங்கையாற்றுக் கரையில் பக்சார் எனுமிடத்தில் சந்தித்தன. இந்திய ஆட்சியாளர்களிடையே ஒற்றுமையில்லாததால் அவர்களது படைகள் சரிவர ஒருங்கிணைக்கப்படவில்லை.
இதனால் சுமார் 7,000 பேர் அடங்கிய கிழக்கிந்தியக் கம்பனிப் படை சுமார் 40,000 பேர் கொண்ட இந்தியப் படையை எளிதில் தோற்கடித்தது. போர்க்களத்தை விட்டு தனது கருவூலத்துடன் தப்பியோடிய மீர் காசிம் பின்பு தற்கொலை செய்து கொண்டார்.
ஷா ஆலம் வாரணாசியில் கம்பனிப் படைகளிடம் சரண் அடைந்தார். வங்காளம், ஒரிசா, பீகார் பகுதிகளில் பிரித்தானிய ஆட்சியை அங்கீகரித்தார். இவ்வாறு புக்சார் சண்டையின் முடிவில் கிழக்கிந்திய நிறுவனத்தை எதிர்த்த இந்திய ஆட்சியாளர்கள் வலுவிழந்து போயினர்.
அலகாபாத் ஒப்பந்தம்
பக்சார் போரின் முடிவில் 12 ஆகஸ்டு 1765 அன்று முகலாயப் பேரரசர் ஷா ஆலமிற்கும், கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையே அலகாபாத் ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தப்படி, வங்காளம், பிகார் மற்றும் ஒடிசா உள்ளிட்ட கிழக்கிந்தியாவின் மக்களிடம் கிழக்கிந்திய கம்பெனி நேரடியாக வரி வசூலிக்கும் உரிமை பெற்றது. மேலும் அவாத் நவாப் சுஜா உத்-தவுலா அலகாபாத் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, கம்பனியாருடன் அமைதி ஏற்படுத்திக் கொண்டார்.
கிழக்கு இந்தியாவின் பெரும் பகுதிகள் கிழக்கிந்தியக் கம்பெனியின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்தன. இதனால் பிளாசி சண்டையும், புக்சார் சண்டையும் இந்தியாவில் கம்பெனி ஆட்சி அமைய முதல் படிகளாகக் கருதப்படுகின்றன.
சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)
மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)
கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)
கனிஷ்கர் ( கி. பி 127 முதல் 163 )
நாளந்தா பல்கலைக்கழகம் (கி.பி. 415 – கி.பி. 455)
கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை
கில்ஜி வம்சம் (கி.பி. 1290 – கி.பி. 1320)
துக்ளக் வம்சம் (கி.பி 1321 – கி.பி. 1413)
விஜயநகரப் பேரரசு (கி.பி. 1336 – கி.பி. 1646)
கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை
கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரை
வில்லியம் பெண்டிங் (1774 – 1839)
வெல்லெஸ்லி (1760 – 1842)
வீர பாண்டிய கட்டபொம்மன் (1760 – 1799)
இராஜாராம் மோகன்ராய் (1772 – 1833)
மருது சகோதரர்கள் (1785 – 1801)
கி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை
இரண்டாம் ஆங்கிலேய மராத்திய போர் (1803)
சர் ஆர்தர் காட்டன் (1803 – 1899)
கானிங் பிரபு (1812 – 1862)
கார்ல் மார்க்ஸ் (1818 – 1883)
தாதாபாய் நௌரோஜி (1825 – 1917)
வேதநாயகம் பிள்ளை (1826 – 1889)
ரிப்பன் பிரபு (1827 – 1909)
ஆல்பிரட் நோபல் (1833 – 1896)
இராமகிருஷ்ண பரமஹம்சர் (1836 – 1886)
பக்கிம் சந்திர சட்டர்ஜி (1838 – 1894)
ஜேம்ஸ் திவார் (1842 – 1923)
W.C.பானர்ஜி (1844 – 1906)
கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை
மனோன்மணீயம் பெ. சுந்தரனார் (1855 – 1897)
தமிழ் தாத்தா உ.வே.சா (கி.பி. 1855 – கி.பி. 1942)
பண்டித ராமாபாய் (1858 – 1922)
சர் ஜகதீஷ் சந்திர போஸ் (1858 – 1937)
கர்சன் பிரபு (1859 – 1925)
பியரி கியூரி (1859 – 1906)
இரவீந்திரநாத் தாகூர் (1861 – 1941)
சுவாமி விவேகானந்தர் (1863 – 1902)
கோபாலகிருஷ்ன கோகலே (1866 – 1915)
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (1867 – 1954)
ஜார்ஜ் கிளாட் (1870 – 1960)
வ.உ.சிதம்பரம் (1872 – 1936)
மார்க்கோனி (1874 – 1937)
சர்தார் வல்லபாய் பட்டேல் (1875 – 1950)
மு.வரதநஞ்சையப்பப் பிள்ளை (1877– 1956)
மூவாலூர் இராமாமிர்தம் (1883 – 1962)
நீல்ஸ் போர் (1885 – 1962)
ராஷ் பிஹாரி போஸ் (1886 – 1945)
முத்துலெட்சுமி ரெட்டி (1886 – 1968)
சீனிவாச இராமானுஜன் (1887 – 1920)
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் (1888 – 1972)
அடால்ப் ஹிட்லர் (1889 – 1945)
கான் அப்துல் கபார் கான் (1890 – 1988)
மேகநாத சாஃகா (1893 – 1956)
உடுமலை நாராயணகவி (1899 – 1981)
அம்பேத்கர் (1891 – 1956)
கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை
லால் பகதூர் சாஸ்திரி (1904 – 1966)
சி.பா.ஆதித்தனார் (1905 – 1981)
சுசேதா கிருபாலினி (1908 – 1974)
சுப்பிரமணிய சந்திரசேகர் (1920 – 1995)
அன்னை தெரேசா (1910 – 1997)
முதல் உலகப்போர் (1914 – 1918)
சிறிமாவோ பண்டாரநாயக்கா (1916 – 2000)
நெல்சன் மண்டேலா (1918 – 2013)
ஜாலியன் வாலாபாக் படுகொலை (1919)
ஒத்துழையாமை இயக்கம் (1920 – 1922)
சுயராஜ் கட்சி (1922 – 1935)
சைமன் தூதுக்கழு (1927 – 1928)
சுவாமி தயானந்த சரஸ்வதி (1930 – 2015)
A.P.J. அப்துல் கலாம் (1931 – 2015)
நம்மாழ்வார் (1938 – 2013)
இரண்டாம் உலகப்போர் (1939 – 1945)
வெள்ளையனே வெளியேறு இயக்கம் (1942)
ராஜீவ் காந்தி (1944 – 1991)
கி.பி. 1951 முதல் …
சங்ககால தமிழ் புலவர்கள்
கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)