மெய்யீற்றின்முன் உயிர்:
நிலைமொழி ஈற்றுமெய்யுடன் வருமொழி முதலிலுள்ள உயிர் இணைந்து விடும்.
எ.கா: தமிழ்+அன்னை – தமி(ழ்+அ)ன்னை = தமிழன்னை
விதி: “உடல்மேல்உயிர்வந் தொன்றுவ தியல்பே” – நன்னூல் 204
நிலைமொழியில் தனிக்குற்றெழுத்தின் முன்னே நின்ற ஒற்று உயிர் முதன்மொழியுடன் புணருணுங்காலை இரட்டும்.
எ.கா: முள்+ இலை = முள்ளிலை
- தனிக்குறில் முன் ஒற்று – முள்
- ஒற்று இரட்டியது – முள்(ள்)+இலை
- உடல்மேல் உயிர் ஒன்றியது – முள்(ள்+இ)லை
= முள்ளிலை
விதி: “தனிக்குறில் முன்னொற் றுயிர்வரி னிரட்டும்” நன்னூல் 205
மகரஈறு
அ. மகர ஈற்றுச் சொற்கள் வருமொழியோடு புணரும்போது ஈற்று மகரம் கெட்டு உயிரீறாய் நின்று, உயிர் முதன் மொழியோடு உடம்படுமெய் பெற்றும், வல்லின முதன் மொழியோடு வல்லெழுத்து மிக்கும் புணரும்.
எ.கா:
- மரம்+இலை = மர+இலை
மர+வ்+இலை = மரவிலை
- மரம்+கிளை = மர+கிளை
மர+க்+கிளை = மரக்கிளை
- சில இடங்களில் வல்லின முதன்மொழியோடு புணரும்போது நிலைமொழியிறுதி மகரம் வருமொழி முதலிலுள்ள வல்லினத்திற்கு இனமான மெல்லினமாகத் திரிந்து புணரும்.
எ.கா:
தினம்+தினம் = தின+தினம்
தின+ந்+தினம் = தினந்தினம்
- மகரஈறு மெல்லின, இடையின முதன்மொழியோடு புணரும்போது மகரம் கெட்டு, இயல்பாகப் புணரும்.
எ.கா:
- இனம்+மணி = இன+மணி
- மரம்+வேர் = மரவேர்