வாடிகன் சிட்டி (Vatican City) இத்தாலி நாட்டின் ரோம் நகரிலுள்ள ஒரு தன்னாட்சியுடைய சுதந்திர நாடாகும்.

தலைநகரம் – வாட்டிகன் சிட்டி

ஆட்சி மொழிகள் – இலத்தீன், இத்தாலி, பிரெஞ்சு, ஜெர்மன்

அரசாங்கம் – சமய சார்புடைய முடியாட்சி

பரப்பு – 0.44 சதுர கிலோ மீட்டர்

நாணயம் – யூரோ (EUR)

தொலைபேசி அழைப்புக்குறி +39

இணையக்குறி .va

இதன் அரசியல் தலைவர் திருத்தந்தையாவார் (போப் ஆண்டவர்).

வாடிகன் சிட்டியில் இவரின் அதிகாரப்பூர்வ உறைவிடமும் அலுவலகமும் அமைந்துள்ள கட்டடம் திருத்தூதரக அரண்மனை என அழைக்கப்படுகிறது.

எனவே கத்தோலிக்க கிறித்தவத்தின் தலைமை மையமாக வாடிகன் சிட்டி திகழ்கிறது. இதன் மொத்தப் பரப்பளவு 44 எக்டேர் (108.7 ஏக்கர்) ஆகவும், 2017 கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1000 ஆகவும் இருக்கிறது.

ஆதலால், இதுவே பரப்பளவு மற்றும் மக்கட்தொகை அடிப்படையில் உலகின் மிகச்சிறிய நாடாகும்.

இது ஒரு திருச்சபை அல்லது புனித தலம்-முடியாட்சி நாடு (ஒரு வகையான அரசியலமைப்பு) இதை ஆள்பவர் ரோமின் பிஷப்பான – போப் ஆவார்.

இதன் உயர்நிலை அலுவலர்கள் அனைவரும் பல்வேறு தேசிய மரபுகளைச் சேர்ந்த கத்தோலிக்க குருமார்களாவர்.

1377 ஆம் ஆண்டில் அவிஞானில் இருந்து போப் இங்கு திரும்பியதிலிருந்து, அவர்கள் இப்போது வாடிகன் சிட்டியில் உள்ள திருத்தூதரக அரண்மனையில் வசித்து வருகின்றனர்.

1929, பிப்ரவரி, 11 – அன்று, இலாத்தரன் உடன்படிக்கையின் படி இத்தாலி பேரரசிடமிருந்து வாடிகன் சிட்டி தன்னாட்சி அதிகாரம் பெற்றது.

வாடிகன் சிட்டி 1929 ஆம் ஆண்டு முதல் நிலைத்திருக்கும் ஒரு நகர-நாடு.

1929 – இல் தன்னாட்சி நாடாக உருவெடுத்த வாடிகன் சிட்டியை கிறித்தவ சமயத்தின் தொடக்கத்திலிருந்தே நிலைத்துவருகின்ற திருப்பீடத்திலிருந்து (Holy See) வேறுபடுத்திக் காண வேண்டும்.

வாடிகன் சிட்டியின் அரசாணைகள் இத்தாலிய மொழியிலும்; திருப்பீடத்தின் அரசாங்க ஆவணங்கள் இலத்தீன் மொழியிலும் வெளியிடப்படுகின்றன.

1929 ஆம் ஆண்டு இலாத்தரன் உடன்படிக்கை மூலமாக உருவான வத்திக்கான் நகர் ஒரு புதிய உருவாக்கமாகவே அமைந்தது.

முந்தைய மத்திய இத்தாலியை உள்ளக்கியிருந்த திருத்தந்தை நாடுகளின்(756-1870) சுவடாக இதனை யாரும் கருதுவதில்லை.

1860 – ஆம் ஆண்டு திருத்தந்தை நாடுகள் முழுதும் இத்தாலி முடியரசோடு சேர்க்கப்பட்டது.

1870 – ஆம் ஆண்டு, இருதியாக ரோம் நகரமும் அதன் சுற்று பகுதியும் இத்தாலி முடியரசோடு சேர்க்கப்பட்டது.

வாட்டிகன் சிட்டியில் புனித பேதுரு பேராலயம், சிஸ்டைன் சிற்றாலயம், வாட்டிகன் அருங்காட்சியகங்கள் போன்ற சமய மற்றும் கலாச்சார தளங்கள் உள்ளன.

இவை உலகின் மிகப் பிரபலமான ஓவியங்கள் மற்றும் சிற்பங்களைக் கொண்டுள்ளன.

வாட்டிகன் சிட்டியின் தனித்துவமான பொருளாதாரமானது அஞ்சல்தலைகள் மற்றும் சுற்றுலாப் பொருட்களின் விற்பனை, அருங்காட்சியகங்களுக்கான நுழைவுக் கட்டணம், மற்றும் வெளியீடுகளின் விற்பனை ஆகியவற்றால் திரளும் நிதி ஆதரவைக் கொண்டுள்ளது.

1984, ஜனவரி, 10 – அமெரிக்காவும், வாடிகன் சிட்டியும் 117 ஆண்டுகளுக்கு பிறகு தனது உறவுகளை மீண்டும் தொடங்கியது.


ஆசியா


ஐரோப்பா


ஆப்ரிக்கா


வட அமெரிக்கா


தென் அமெரிக்கா


ஆஸ்திரேலியா


அண்டார்டிகா