ரிச்சர்டு கூலி வெல்லஸ்லி (Richard Colley Wesley, 1st Marquess Wellesley) (20 சூன் 1760 – 26 செப்டம்பர் 1842) அயர்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியங்களின் அரசியல்வாதியும், காலனித்துவ நிர்வாகியும் ஆவார்.
வெல்லஸ்லி 1798 முதல் 1805 முடிய பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநராகவும்.
1809 முதல் 1812 முடிய ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவுத் துறை அமைச்சராகவும்,
இறுதியாக 1821 முதல் 1828 முடிய அயர்லாந்தின் தலைமை ஆளுநராகவும் பணியாற்றியவர்.
இவரும் இவரது சகோதரரும் சேர்ந்து இந்தியாவை ஆண்ட ஏழே ஆண்டுகளில் பிரிட்டிஷ் இந்தியாவின் பரப்பை இரு மடங்காக்கினார். அது வரை காரன் வாலீஸ் போன்றவர்கள் கடைபிடித்து வந்த தலையிடா கொள்கையினை புறந்தள்ளிவிட்டு, அற்ப காரணங்களுக்கும் தலையிடலாம் என்ற புதிய கொள்கையை உருவாக்கி அதன் படி நடந்தார் . இவரது நாடு பிடிக்கும் ஆதிக்க கொள்கைகளை இங்கிலாந்தின் ஆதிக்க குழுவினர் ஆதரிக்காமல் அவரை இங்கிலாந்துக்கு திருப்பி அழைக்க எண்ணினர்.இதற்கு முன்னரே வெல்லெஸ்லி தாமே கவர்னர் ஜெனரல் பதவியை துறந்தார்
தென்னிந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட, பிரான்சு கம்பெனியிடம் திப்பு சுல்தான், ஒப்பந்தம் செய்து கொண்டதை அறிந்த வெல்லஸ்லி, 1799ல் ஆங்கிலேயப் படைகளை அனுப்பி முதலில் திப்புசுல்தானைப் போரில் கொன்று பின்னர் ஸ்ரீரங்கப்பட்டணத்தைப் கைப்பற்றினார். பின்னர் நடந்த வந்தவாசி போரில் ஆங்கிலேயர்கள், பிரஞ்சுப் படைகளையும், ஆற்காடு நவாப் படைகளையும் வென்று தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களை கைப்பற்றினர்.
1803ல் நடைபெற்ற இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போரில் வென்ற ஆங்கிலேயர்கள், மராத்தியப் பேரரசின் கட்டக், பலாசோர், மேற்கு மிட்னாபூர் மற்றும் கிழக்கு மிட்னாபூர் மாவட்டப் பகுதிகளை கிழக்கிந்தியக் கம்பெனிப் படைகள் கைப்பற்றியது.
30 திசம்பர் 1803இல் செய்து கொண்ட வசாய் ஒப்பந்தப்படி, குவாலியரின் தௌலத் சிந்தியா, குர்குவான், ரோத்தக், ஆக்ரா, புந்தேல்கண்ட், பரூச், அகமதாபாத் மற்றும் குஜராத்தின் சில பகுதிகளை கிழக்கிந்திய கம்பெனியிடம் இழந்தது.
24 திசம்பர் 1805இல் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, இந்தூர் மன்னர் யஷ்வந்த்ராவ் ஹோல்கர், கிழக்கிந்திய கம்பெனிக்கு ஆண்டுதோறும் கப்பத் தொகை செலுத்திக் கொண்டு, கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக்குட்பட்டு, தன்னுடைய அரசை தக்க வைத்துக் கொண்டார்.
இவர் துணைப்படை திட்டத்தை கொண்டுவந்தார்.
கல்கத்தாவில் வில்லியம் கோட்டை கல்லூரியை நிறுவினார். இந்திய-பிரித்தானியாவுக்குமிடையே இருந்த வர்த்த பிணக்குகளை தீர்த்து வைத்தார்.
அயோத்தி பகுதியிலிருந்து வணிகர்களை வெளியேற்றியதற்காக, இந்தியத் தலைமை ஆளுநர் ரிச்சர்டு வெல்லஸ்லிக்கு எதிராக ஜேம்ஸ் பால் எனும் நாளுடாளுமன்ற உறுப்பினர், 1808ல் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானம் 31 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது.
சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)
மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)
கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)
கனிஷ்கர் ( கி. பி 127 முதல் 163 )
நாளந்தா பல்கலைக்கழகம் (கி.பி. 415 – கி.பி. 455)
கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை
கில்ஜி வம்சம் (கி.பி. 1290 – கி.பி. 1320)
துக்ளக் வம்சம் (கி.பி 1321 – கி.பி. 1413)
விஜயநகரப் பேரரசு (கி.பி. 1336 – கி.பி. 1646)
கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை
கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரை
வில்லியம் பெண்டிங் (1774 – 1839)
வெல்லெஸ்லி (1760 – 1842)
வீர பாண்டிய கட்டபொம்மன் (1760 – 1799)
இராஜாராம் மோகன்ராய் (1772 – 1833)
மருது சகோதரர்கள் (1785 – 1801)
கி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை
இரண்டாம் ஆங்கிலேய மராத்திய போர் (1803)
சர் ஆர்தர் காட்டன் (1803 – 1899)
கானிங் பிரபு (1812 – 1862)
கார்ல் மார்க்ஸ் (1818 – 1883)
தாதாபாய் நௌரோஜி (1825 – 1917)
வேதநாயகம் பிள்ளை (1826 – 1889)
ரிப்பன் பிரபு (1827 – 1909)
ஆல்பிரட் நோபல் (1833 – 1896)
இராமகிருஷ்ண பரமஹம்சர் (1836 – 1886)
பக்கிம் சந்திர சட்டர்ஜி (1838 – 1894)
ஜேம்ஸ் திவார் (1842 – 1923)
W.C.பானர்ஜி (1844 – 1906)
கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை
மனோன்மணீயம் பெ. சுந்தரனார் (1855 – 1897)
தமிழ் தாத்தா உ.வே.சா (கி.பி. 1855 – கி.பி. 1942)
பண்டித ராமாபாய் (1858 – 1922)
சர் ஜகதீஷ் சந்திர போஸ் (1858 – 1937)
கர்சன் பிரபு (1859 – 1925)
பியரி கியூரி (1859 – 1906)
இரவீந்திரநாத் தாகூர் (1861 – 1941)
சுவாமி விவேகானந்தர் (1863 – 1902)
கோபாலகிருஷ்ன கோகலே (1866 – 1915)
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (1867 – 1954)
ஜார்ஜ் கிளாட் (1870 – 1960)
வ.உ.சிதம்பரம் (1872 – 1936)
மார்க்கோனி (1874 – 1937)
சர்தார் வல்லபாய் பட்டேல் (1875 – 1950)
மு.வரதநஞ்சையப்பப் பிள்ளை (1877– 1956)
மூவாலூர் இராமாமிர்தம் (1883 – 1962)
நீல்ஸ் போர் (1885 – 1962)
ராஷ் பிஹாரி போஸ் (1886 – 1945)
முத்துலெட்சுமி ரெட்டி (1886 – 1968)
சீனிவாச இராமானுஜன் (1887 – 1920)
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் (1888 – 1972)
அடால்ப் ஹிட்லர் (1889 – 1945)
கான் அப்துல் கபார் கான் (1890 – 1988)
மேகநாத சாஃகா (1893 – 1956)
உடுமலை நாராயணகவி (1899 – 1981)
அம்பேத்கர் (1891 – 1956)
கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை
லால் பகதூர் சாஸ்திரி (1904 – 1966)
சி.பா.ஆதித்தனார் (1905 – 1981)
சுசேதா கிருபாலினி (1908 – 1974)
சுப்பிரமணிய சந்திரசேகர் (1920 – 1995)
அன்னை தெரேசா (1910 – 1997)
முதல் உலகப்போர் (1914 – 1918)
சிறிமாவோ பண்டாரநாயக்கா (1916 – 2000)
நெல்சன் மண்டேலா (1918 – 2013)
ஜாலியன் வாலாபாக் படுகொலை (1919)
ஒத்துழையாமை இயக்கம் (1920 – 1922)
சுயராஜ் கட்சி (1922 – 1935)
சைமன் தூதுக்கழு (1927 – 1928)
சுவாமி தயானந்த சரஸ்வதி (1930 – 2015)
A.P.J. அப்துல் கலாம் (1931 – 2015)
நம்மாழ்வார் (1938 – 2013)
இரண்டாம் உலகப்போர் (1939 – 1945)
வெள்ளையனே வெளியேறு இயக்கம் (1942)
ராஜீவ் காந்தி (1944 – 1991)
கி.பி. 1951 முதல் …
சங்ககால தமிழ் புலவர்கள்
கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)